இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரவஆைரது குஞ்சத்திரனா?
வண்ணப் பறவை
வகைகளிலே வான்திரியும் சின்ன ஒருபுள்ளாய்த்
தோன்றி யிராவிடினும், குன்றில் விழுந்திறங்கிப்
பாறை குடைந்தெழுந்து, நின்ற நெடும்பனைபோல்
நீளக் குதித்துவந்து, வெள்ளை மணற்பரப்பில்
விரிந்து நடைபயின்று, 45 கொள்ளைப் பெருங்கடலைக் கூடுதற்கே ஒடுகின்ற ஆற்றுக்குள் நீரில்
அலைந்து விளையாடி ஊற்றில் உடல்புரண்டே
ஒடிவரும் மீன்குஞ்சாய் நீ, பிறந்து வாழ்ந்தாலும்
நின்துயரம் கானேனே!
மேவும் கழுதையென
மேனி எடுத்துவிட்டாய்! 50 இம்மா நிலத்தில்
இருக்கும் பிறவிகளில் அம்மாவோ, நம்பிறவித்
துன்பத்தை ஆர்படுவார்?.