இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ സ്പെ
நின்றால் அழகு!
நடந்தால் மிகஅழகு! பாராளும் வேந்தன்போல்
பட்டாளக் காவலன்போல் நேர்நிமிர்ந்த வீறுநடை!
நெட்டுநெளி யாமுதுகு ! என்னே! அடடா!
இதன.ழகு கொள்ளை! கொள்ளை !! இன்னபடி யன்றோ
பிறவிஎடுத் தல்வேண்டும்!" 130
-என்றபடி தாய்க்கழுதை
ஏக்கப் பெருமூச்சாம் ஒன்றைத்தான் குட்டி
முகங்கருக விட்டதுகாண்!
மூச்சு முகம்படவே,
குட்டி முகந்திரும்பி, "பேச்சற்று, ஏன் அம்மா
பெருமூச் செறிகின்றாய்! இக்காளை மாட்டினால்
ஏதும் துயர்வருமா? f35 பக்கம் வருமுன்னே
ஒடிப் பதுங்குவமா?" -என்றே வினவிற்று:
13