இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യഠഭൂു നാ
நீண்டுயர்ந்த கொம்புகளைச்
சீவிமிகக் கூராக்கி, வண்ணமிட்டுக் கொப்பியிட்டு
வார்த்தமணி மாலையிட்டுக் கிண்கிணியும் கட்டிக்
கிழமாடே. ஆனாலும் பாராட்டிக் கொண்டாடும்
பாங்கைஎங்கும் கண்டிருப்பாய்? 205
சிராட்டி நம்மை
ஒருநாள் குளிப்பாட்டும்
நல்லஒரு மாந்தனையும்
நாம்கண்ட தில்லையே!
தொல்லைதரா நாள்இருப்பின்
நமக்குத் திருநாளே!
பொல்லாத பிள்ளைகள்முன்
போய்விட்டால் போதுமே! எல்லார்க்கும் நாமே
இளைக்காரம் என்பதுபோல் 2煎} ஒட்டைத் தகரத்தை
ஒர்பையன் வால்பிணிப்பான்! மூட்டைப் பொதிபோல் ஒர் மூடன் முதுகமர்வான்! ஒட்டுஓட் டென்றுஒருவன்
கால்கட்டி ஒட்டிடுவான்! ஆட்டமென்ன? பாட்டென்ன?
ஆலோலக் கொட்டென்ன?
19