இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലാഠഭൂു ശ്ലോ
அன்புக் கணவனெனும்
அச்சொல் விழுந்தவுடன், மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனி சிலிர்சிலிர்க்க, மண்சார மற்ற
மரமற்று வீழ்வதுபோல், பொத்தென்று கீழே
பொதிபோல் விழுந்ததுவே!
வீழ்ந்தவுடன் காளைக்கோ
ஒன்றும் விளங்கவில்லை! 290
ஆழ்ந்த துயரத்தால்
குட்டி அதிர்வடைந்து,
செய்வ தறியாமல்
தாயுடலைச் சுற்றியது!
பெய்மழைபோல் கண்களிலே
நீரும் பெருகிற்று!
காளை மனந்தேறிக்
காற்றாய்ப் பறந்தோடி, மீளவந்து வாய்நீரைப்
பெண்கழுதை தன்முகத்தின் 295 மேல்ஒழுக விட்டுவிட்டு,
மேனி விசித்தழுத பால்முகத்துக் குட்டியினை
மெத்தப் பரிவாக,
27