இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യഠഭൂഗു മമ്മൂ
நாளும் பணிமுடிந்தால்
நாட்டாண்மைக் காரரோ
எங்கள் இருவரையும்
ஒன்றாய்ப் பிணித்திடுவார் !
பொங்குமய்யா என்னுள்ளம்! பூரித்துப் போவேன்நான்!
ஒத்தநடை போட்டபடி: -
ஊரெல்லாம் காடெல்லாம்- 320 புத்துணர்வு கூட்டுகின்ற
புல்லடர்ந்த பக்கமெல்லாம் மேய்ந்திருப்போம்! அக்கால்
மனத்தால் இணைந்துவிட்டோம்! வாய்ந்ததொரு நாள்முதலா
வாழ்க்கை தொடங்கிவிட்டோம்!
ஓராண்டு செல்ல, - ஒருநாள் நலிவுகொண்டார்! நாராய் மிகமெலிந்தார்;
நானோ நிறைகுவி! 325 மூன்றுபொதி தூக்குகின்ற .
வன்முதுகு கூன்விழவேஊன்றுகால் போட்டே
உடல்தளர்ந்து சோர்ந்துவிட்டார்!
மேனி தளர்ந்ததனால்
மேய்ச்சலுக்குச் செல்வதில்லை;
31