இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
യ്യാഭു മമ്മൂ
காளை உரைத்தவுரை
காதில் கடுநஞ்சாய்க் 400 கூளைக் கழுதைதன்
கூர்ங்காதில் பட்டவுடன் உள்ளம் நடுங்க
உயிர்நடுங்கக் கண்ணின் வெள்ளம் பெருக்கெடுக்க
விம்மிவிம்மித் தானழுது, காளையினை நோக்கிக்
கடுங்குரலில்,
'அண்ணாவே!
பாளைச் சிறுமியவள்
பால்முகத்தைப் பாருங்கள். 405 இச்சிறுமி மேல்உறுதி;
என்கணவன் மேல்உறுதி; அச்சில்லா தோடிடும்நம்
அண்டத்தின் மேல்உறுதி; என்கணவன் மாய்ந்தபின்னை
இன்னொருவன் தன்முகத்தை என்னிறுதி நாள்வரைக்கும்
ஏறெடுத்து நான்பாரேன். என்னவென்று எண்ணிவிட்டீர்?
ஏதவுரை கூறிவிட்டீர்? 470
தின்னுவது மண்ணா? என்
தீய்ந்திருக்கும் உள்ளத்தில்
39