இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ののの2ó ダの22 ゲの2多
மக்கள் புதைகாட்டில்
மண்ணிட்ட மேடுகளும்
மிக்குயர்ந்து நின்ற
நெடுமரங்க ளும்கடந்தே,
ஆற்றோரம் தாண்டி,
அழகாய்ச் சிலிர்த்தோடும்
ஊற்றோரம் வந்துநின்றே
ஊரை இறுதிமுறை
பின்திரும்பிப் பார்த்துக்
கழுதையம்மை பேசிற்றே!- 590
"என்பிறந்த ஊரிதனை
இன்னும் சிறுபொழுது கண்ணாரப் பார்க்கின்றேன்;
காத்திருங்கள் அண்ணாவே! எண்ணாத எண்ணமெல்லாம்
நெஞ்சில் எழுகுதையே! பாரிலுள்ள மாந்தரிங்குப்
பண்ணும் பிழைகளுக்கே ஊரென்ன செய்யும்?
உலகந்தான் என்செய்யும்?" 595
"இவ்வூரில் தான்பிறந்தேன்!
இவ்வூரில் தான்வளர்ந்தேன்!
இவ்வூரில் தான்என்றன்
இன்கணவர் கைப்பிடித்தேன்!
58