பக்கம்:கவிகளின் காட்சி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l L0 கவிகளின் காட்சி கும் மருவியுள்ள இந்த மங்கையின் கரிய குழலில் விசுகிற அரிய நறுமணம் போல் இனிய வாசனையை நீங்கள் எங்கே ஆவது கண்டது உண்டா? இருந்தால் உ ண் ைம ைய ஒளியாது தெளிவாச் சொல்லுங்கள்!” என்று ஒரு தலைவன் தனது இனிய காகலியின் கூந்தலை வியந்து மகிழ்ந்து வண்டு களை நோக்கி இவ்வாறு செவ்வையா வினவியிருக்கிருன். பல நீர்மைகள் கூர்மையா உணர்ந்து கொள்ளுமாறு ர்ேமையா இதில் வாழ்ந்த வரவே கேம நியமங்கள் எக்திய சீரோடு சேர்ந்து திகழ்கின்றன. வையம் இனிதவாழவேசெய்யுள் செய்கிறது. கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல் tடிச் செறிந்து. ன்ன்றது. கூந்தலின் கிலேமையைத் துலக்கி கின்றது. வந்த விருந்தினரை உபசரித்து அவரோடு உண்டு வருகிற உபகாரியின் கிளைபோல் தழைத்துச் செழித்து நீண்டு செறிந்து நெருங்கி ஒருங்கே அக் குழல் ஓங்கி உயர்ந்திருந்தது என இங்கனம் உவமை கூறியிருக்கிரு.ர். மனித இனம் புனிதமாய் உயர்ந்து இனிய கிலேமைகளை அடையவே நூல்கள் உணர்வு நலங்களை உரிமையா வழங்கி வருகின்றன. ஆதிமுதல் தமிழ் மொழி திே நெறிகளையே நியமமாப் போதித்து நல்லநீர்மைகளை வளர்த்து வருகிறது. மூவாத் தமிழ்மொழியே முந்தவுயர் திேகளேப் பாவால் வழங்கிப் பயனருளித்--தேவாதி தேவன் திருமொழியாய்த் தேசு மிகப்பெற்றுப் பூவில் உளது பொலிந்து. அறம் பொருள் இன்பங்களை அருளிய பரம் பொருள்