பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கவிக்குயில் சரோஜினியின்

தனது, செல்வியின் அறிவாழத்தைக் கண்டு வியந்த அகோரநாத் சட்டோடாத்தியாயர், அவரைத் தக்க, மேல் கல்வி கற்றிட சென்னை மாநகருக்கு அனுப்பி வைத்தார். அக் காலத்தில் ஒரு பெண்ணைத் தனியாக வெளியூருக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்த இவரது துணிச்சலான நெஞ்சத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது அல்லவா?

எனவே, சரோஜினி சென்னை நகர் வந்தார்; கற்க வேண்டிய கல்வியைத் தந்தையின் எண்ணங்களுக்கேற்பக் கற்றார்: சென்னை மாநிலத்திலேயே அப்போது நடைப்பெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் பெண்ணாக தேர்வு பெற்றார்.

ஏறக்குறைய பனிரெண்டு வயதுடைய ஒரு பெண், மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலத்தில், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வானதைக் கண்டு பள்ளி ஆசிரியர்களும், உடன்படிக்கும் மாணவிகளும் ஆச்சரியமுற்றார்கள்.

சரோஜினி தேர்வு வெற்றியால், பள்ளிக்கு நற் பெயரைத் தேடித் தந்ததுடன், அவருடன் கல்வி கற்ற மாணவிகளும் அவருக்கு அடுத்தபடியாகத் தேர்வாகி நற் புகழைப் பெற்றார்கள்.

சென்னை படிப்பை முடித்துக்கொன்டு, சரோஜினி மேற்கொண்ட பட்டப்படிப்புக்கு லண்டன் மாநகரம் சென்றார். அவரது தந்தையார் லண்டனிலே தாம் பட்டம் பெற்ற கல்லூரிக்கே, சகல ஏற்பாடுகளுடன் இவரை அனுப்பி வைத்தார்.