பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

17

வருமா? வராது ஏதோ ஒன்றிரண்டு பேர்கள்தானே விதி விலக்கு?

சரோஜினி தனது கவிதைகளை வங்காள மொழியிலா எழுதினார்? இல்லை; தெலுங்கு மொழியிலா வரைந்தார்? இல்லை. பிறகு எந்த மொழியில் எழுதினார்?-ஆங்கிலத்தில்!

பெண்பாற்புலவரான சரோஜினி, தனது இன்பத்துக்காக உள்ளது உள்ளபடியே, கண்டதைக் கண்டவாறே கவிதைகளை மளமளவென்று எழுதியபடியே இருந்தார்!

அவரது கவிதைகளைக் கல்லூரி மாணவி-மாணவியர் படித்தார்கள்! மக்கள் நெஞ்சங்கள் சுவைத்தன! கவிஞர்கள் அவற்றின் ஆழம் என்னவென்று அளந்தார்கள்! ஆங்கில அதிகாரிகள் அதைக் கேட்டு மொய்த்தார்கள்! கவிதைப் பூக்களின் மகரந்தத்தைச் சுவைஞர்கள் எல்லாருமே சுவைத்து வியந்து போனார்கள்!

ஆங்கில மொழியிலே கவிதை எழுதிட இவருக்கு எப்படி வந்தது இந்த ஆற்றல்? சொற்குற்றம் இல்லை; பொருட்குற்றமும் இல்லை; இலக்கணம் தானே தளை தட்டுகிறது; அவை கூட ஓசை நயத்துடன் ஒன்றி விட்டனவே! இந்த இளம் கண் யார்? யார் இந்த இளம் பெண்? என்று லண்டன் மாநகரக் கல்வியாளர்கள், மக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் கலந்து ஆச்சரியத்துடன் பேசினார்கள்!

சரோஜினியின் கவியாற்றல், நண்பர்கள் அறிய, நண்பர்களால் அறிஞர்கள் அறிய, அறிஞர்களால் அரசு அறிய, இவ்வாறே விளம்பரமானார் குமரி சரோஜினி அறிஞர்கள் எட்மண்ட் கர்ஸ், ஆர்தர் சைலன்ஸ், போன்றவர்கள் பாராட்டிப்பேசினார்கள்! சரோஜினி கிறுக்கிய கவிதைகளை எல்லாம், லண்டன் புத்தகாலயங்கள் நூலாக வெளியிட்டு விற்பனை செய்தன!