பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கவிக்குயில் சரோசனியின்

இலண்டன் மாநகரிலே சரோஜினி, கவிதைகளுக்கு ரசிகர்கள் தோன்றினார்கள். அன்றிலிருந்து எங்கு பேசினாலும் சரோஜினி என்ற பலாச் சுளையிலே மொய்க்கும் ஈக்களானார்கள் மக்கள்!

சரோஜினி எந்த மண்டபத்திலே பேசினாலும் சரி, பொதுக் கூட்டங்களானாலும் சரி, இலக்கிய விழாக்களானாலும் சரி, ஆங்காங்கே மக்கள், ரசிகர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் தேடி நாடி வந்து அவர் பேச்சுக்களை மதுவுண்ட வண்டுகள் போலக் கேட்டு மயங்கினார்கள்.

நாளுக்கு நாள் சரோஜினி இலக்கியக் கவியுணர்ச்சி லண்டன் மக்களிடையியே மட்டுமல்ல; இவரது கவிதை நூற்களின் விற்பனைகள் எங்கெங்கே விற்றனவோ அங்கங்கே எல்லாம் பொங்கி பெருகியது அவரது கவிதைகளைப் பற்றி அவரே கூறும்போது:

"அழகும் பொலிவும் அமைந்த தரை, வண்ணப் பூச்சுக்களால் வனப்பான சுவர்கள், கண்களைக் கவர்ச்சி செய்யும் வீட்டுச் சாமான்களான மேசை, நாற்காலிகள், ஓவியப்படங்கள், இவற்றினூடே அமர்ந்து அமர்ந்து களைத்து சமைத்து விட்டேன்."

"இறைவழிபாடும். பூசையும், ஆடலும், பாடலும், திருவிழாக் கேளிக்கைகள், மக்கள் கூடும் அறிவுக் கோட்டங்கள் அனைத்திலும் அமர்ந்து பொறுமை இழந்து விட்டேன்!"

"பூக்கள் மலிந்த கானகம், பூந்தோட்டம், மலர்க் காட்சி, இன்னிசைக்கு வண்டுகள், பறவைகள், தேன் குடித்தக் களிப்பில் மதரீங்காரமிடும் வண்டுகளது பேரோசை இரைச்சல், இவற்றினிடையே அகப்பட்டு உடல் வியர்த்து விட்டேன்."

"எனக்கு இப்போது தேவை தனியான இடம், சந்தடியற்ற மண்டம், தாமரைக்குளம், அதிலே நீராடிடும்