பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43

நான் ஒரு பெண் ; தொட்டிலை ஆட்டிய பெண்! வீட்டை மறந்து விட்டேன்! பம்பாயிலே இருந்துப் போராட்டம் செய்கிறேன்: கவிபாடும் பழக்கத்தையும் தூக்கி எறிந்து விட்டேன்! சகோதரர்களே! எழுக! போராடிட வருக!

சகோதரிகளே! குழந்தைகளைப் பெறுவது மட்டுமே தமது பணியன்று; பாலூட்டி சீராட்டி அவர்களைப் பராமரிப்பது மட்டுமே நமது வேலைகளன்று; கணவரைக் கவனிப்பது மட்டுமே நமது கடமையன்று.

நமது நாட்டுக்காக நாம் ஆற்றிய தொண்டு என்ன என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். என் வீடு, என் வாசல், என் குழந்தைகள், என் தாய், தந்தை, கணவர் ஆகியவைதான் பொதுஎன்று எண்ணாதீர்!

மக்களுக்கு அந்த கடுகு உள்ளம் வரக்கூடாது. யாதும் ஊரே, யாவரும் உறவே, எல்லாருக்கும் வேண்டுவது எல்லா வசதிகளுமே நாடு பெற வேண்டியது தன்மானச் சுதந்திரமே என்ற தொன்னையுள்ளத்தை பெறவேண்டும் நீங்கள்!

மக்களுக்கு சேவை செய்வதில் ஆணென்றும் பெண்னென்றும் பேதம் எழக்கூடாது சொந்தக் கடமைகளைச் செய்திட எப்படி பொங்கி எழுகின்றீர்களோ, அதே உணர்வுகள் நாட்டுக்கு விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயும் பீறிட்டு-வீறிட்டுத் தோன்ற வேண்டும்.

தாம் பிறந்த மண்! நம்மால் விடுதலைப் பெற்றது என்ற எண்ணம் உங்களுக்குள் உதிக்க வேண்டும்! அது தான் தாய்நாட்டு பற்று விடுதலை வேட்கை!" என்று பேசி முடித்தார்