பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கவிக்குயில் சரோஜினியின்

நாட்டில் நடைபெற்ற கலவரங்களைக் கண்ட கவிக்குயில் காந்தியடிகளாரைப் போலவே, அவரும் கவலை அடைந்தார். நாடு எங்கு பார்த்தாலும் போர்க்கள இரத்த காடாகக் காட்சி தந்தது.

"இரத்தப் பலி இல்லாமல், சுதந்திர தேவியைப் பெற முடியாது”. என்று சுவாமி விவேகானந்தர் கூறிய வாக்கு உண்மையாகவே மாறிவிட்டது.


17. சரோஜினி தேவி கவர்னர் ஆனார்!

பாரதநாடு தனது அடிமைச் சங்கிலியை உடைத் தெறிந்து ஏகாதிபத்திய ஆட்சியிலே இருந்து இந்தியா விடுதலை பெற்றது; சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்ற வெள்ளையர்கள் ஆட்சியில் பாரதம் என்ற நாடு விடுதலை பெற்றுவிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றது என்னவோ உண்மை தான்; ஆனால் அந்த நாட்டை உலகம் போற்றும் ஜனநாயக நாடாக மாற்றவேண்டும் அல்லவா? அதனால் நாடு விடுதலைப் பெற்றும் தலைவர்களுக்கு ஓய்வே இல்லாமல் இருந்தது.

அந்தந்த மாகாண நிர்வாகப் பொறுப்பும் ஆக்க வேலைகளும் அவர்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்தன. கவிக்குயில் சரோஜினி தேவி ஐக்கிய மாகாணக் கவர்னராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்.

மகாத்மா காந்தியின் அகிம்சா தத்தவமும், தேசப் பற்றும், மக்கள் சேவையும்தான், சரோஜினி தேவியை முழுநேர அரசியல்வாதியாக மாற்றியது.