பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வழிபார்த்து நாகப் பன்தான்
வைவதைப் பார்த்து வந்து,
விழிபார்த்து, வீதி பார்த்து,
விவரமாய் நடந்த தெல்லாம்,
'குழிபார்த்துத் தள்ளி மேலே
குதிரைமண் கொட்டிற் றென்னப்
பழிபார்த்துப் போட்டான் கூறிப்
பக்கத்து வீட்டுக் கிட்டன்.

குட்டுவோன் கூடச் சேர்ந்து
கொள்ளுவான்; குன்றி னோன்மேல்
கட்டுவான் கச்சை; காட்டிக்
கைக்கூலி கறப்பான்; சும்மா
திட்டுவான்; சமயம் கிட்டின்
திருடுவான்; மாட்டிக் கொண்டால்
முட்டுவான், கண்கா ணாமல்
மூதேவி யான கிட்டன்.

சிந்தித்துச் செயல்ப டாத
சீமான்நா கப்பன் சீறி
நிந்தித்த தனைத்தும் கூட்டி
கெஞ்சில்வைத் தெடுத்துக் கொண்டு,
சந்தித்து நந்த னைத்தான்
சரக்குமக் கான தென்று
வந்தித்து விற்க அன்றே
வகைசெய்து கொண்டான் பாவி!

38