பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so வருணனை வளம் * 87 - இந்த நிலையில் அவளது விரகவேதனையை அவளாலேயே நினைக்கச் செய்துவிடுகின்றார் வாலியார். இங்கு அவர் உளவியல் வல்லுநர்போல் செயற்படுகின்றார். சிறுகால் மலர்த்தும் சீதளப் பூமேல் அறுகால் மல்லாந்து-கண் அயர்தல் போல்... ஒருகால் இவனெனக்கு உடன்பட்டால்-நான் இருகால் பரப்பி-இவனது இளமார்பில் புரள வேண்டும்; மர்த்தனம் புரியும்-மத்து நர்த்தனம் புரிய... தயிரில் வெண்ணெய் திரளுதல் போலே இவனாலென் உயிரில் ஓரின்பம்! திரள வேண்டும்! ஆசைப் பெருக்கில்-ஒர் ஆயிரம் கிருதி-எனை ஆக்கத் தூண்டும்-இவன் ஆகிருதி! இங்ங்னம்-தன் எதிர் நிற்கும். விஜயனின்-உடல் வாளிப்பைப் பார்த்தாள்; முனம்வேர்த்தரியா ஊர்வசிவாளிவாளியாய் வேர்த்தாள்! மார்க்கச்சு-வேர்வை மழையில் நனைந்துதீர்க்கச்சு என்றாக...