பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அன்னத்துவிஅதிகம் தூவிஅமர்க்களமாய் விரித்தஅமளியில்... கொட்டாவிமேல்கொட்டாவிவிட்டு-நான் கொட்டு கொட்டென்றுமுழித்துக் - கிடந்ததுதான் மிச்சம்; வந்ததென்னவோ-கண் உறக்கமல்ல; அச்சம்! மாளிகை-எனக்கு மயானமாகத் தெரிந்தது; சப்பிரமஞ்சம்சிதையாக எரிந்தது; காமத்தீ ஈமத் தீயாக-என் கட்டை அதில் எரிந்தது; சேடியர் பாடிய சோபனம்சரம கவியாய் விரிந்தது! பள்ளியானது கொள்ளியானதும்பொசுக்கென எழுந்தேன்; பீதி பிடர்பிடித்துத் தள்ளவீதி கடந்து-உன் விடுதி வந்து விழுந்தேன்! உள்ளத்தில் உள்ளதை-ஊர்வசி ஒன்றுவிடாது கொட்டினாள்; தன்விரகமென்னும் தமுக்கை-அவள் விஜயன்முன் கொட்டினாள்! (I-பக்:183-85)