இயல்-3 | காவிய மாந்தர்கள் அறிமுகம்) கதை மாந்தர்களை வாசகர்கட்கு அறிமுகம் செய்யும் கலையைக் கம்பனிடம்தான் கற்க வேண்டும். பரதன் ஒடத்தில் செல்லும்போது தன் அண்ணன்மாரை குகப் பெருமானுக்கு அறிமுகம் செய்துவைப்பதைக் கம்பனில் கண்டு மகிழலாம். அக்கலையெல்லாம் அவதார புருஷன் எழுதி அவனியின் புகழெல்லாம் தன்பால் குவித்துக் கொண்ட வாலியாருக்கு அத்துப்படி! அந்தக் கலைஞானம் கவிஞர் வாலிக்குப் பாண்டவர் பூமியில் கைகொடுத்து உதவுகின்றது. அதனை ஈண்டுக் காணலாம். 1. கங்கை உலகில் ஆறுகளின் கரையில் வாழ்ந்தவர் களிடமிருந்துதான் நாகரிகம் முகிழ்த்ததாக வரலாறு கூறும். ஆகவே இங்கும் கங்கையே முதல் இடம் பெறுகின்றது அறிமுகத்தில். - சக்கர வாளப் பட்சிகள் சல்லாபிக்கும்-ஒரு சரத் ருதுவில்.... சாதகப் புள்ளெல்லாம் சாதகம் புரியும்-ஒரு சாயரட்சையில்... வணமகளின் வார்குழலை வாரி வகிர்ந்தெடுத்த நேர் வகிடுபோல்-ஒரு நீர் வகிடுபோல்.... அந்த முல்லை நிலத்தை முத்தமிட்டு....
பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை