பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'அன்னையை!-என்னை ஆராதித்த-அந்த அடிமைப் பெண்ணின்அடிவயிற்றில்... உலக ஒழுக்கங்களெல்லாம்ஒன்று திரண்டது போன்றஒருவன்உதிக்கப் போகிறான். இந்தப் பூப்பந்தில் உள்ளவர்க்குபுதிய புதிய நீதிகள்-அவன் விதிக்கப் போகிறான்! அம்மா!-அவன் அறக்கடவுளின் அம்சம்; அவன்நிழலில் தழைக்கும்-இந்த நிலாவம்சம்! (I-பக்:69-70) தரும தேவதைக்குமகரிஷி மாண்டவ்யர்தந்த சாபத்தால்... அவள் அம்பிகையின்அடிமைப் பெண் வயிற்றில்... விதுரனார்விளைந்தாள்; இன்றும் வையம் புகழும்-அந்த விதுர நீதியை-அவள்தான் வரைந்தாள்! (1-பக்.77)

  • 13. காந்தாரி. இவளுடைய அறிமுகம் 'உப்பு சப்பென்றிருந்தாலும், அதிலும் மின்னொளி வீச்சு உண்டு.