பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இது மிகச் சுருக்கமான அறிமுகம். கதை யோட்டத்திற்குக் கை கொடுத்து உதவப் போதுமான்து. இவர்கள் பிறப்பு பாண்டுவின் மைந்தர்கள் பஞ்ச பாண்டவர்கள் என வழங்கக் காரணமாயிற்று. 23. சகுனி இவனைப்பற்றி அறிமுகம் செய்யும்போது அவன்மீது கவிஞர் வாலி கொண்ட சினத்தின் சாயையும் சேர்ந்து வெளிப்படுகின்றது. -தீய வர்க்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவன்; சுத்தமாக சத்தியத்தை விடுத்தவன்! தூரத்து உறவல்ல; துரியோதனனுக்கு-அவன் தாய்மாமன்; மருகனை நூறுதல் பொருட்டு நூறு வழி சொல்லும் நோய் மாமன்! உத்தமி காந்தாரியின்உடன்பிறப்பு; அவளாலும்கழிக்க முடியாதகடன் பிறப்பு! அந்த சிறியன் பெயர்சகுனி! அவன்ஆணுருக் கொண்டஆயிரம் கூனி! அவன்மூவகை மலங்களின்