பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு குமரியொருத்திகுளிப்பது கண்டு-மனம் குப்பையாக ஆனார். நீரில்நின்றுகொண்டிருந்தவளின்நூலாடையை-காற்று நீக்க... பரத்துவாசர்-பெண்ணழகைப் பார்வையால் மாந்தினார்; சொல்லாமல்சுக்கிலம் நழுவ.... பத்திரமாய்-அதையொரு பாத்திரத்தில் ஏந்தினார்! அந்த சுக்கிலம்ஆண் சேயானது; அந்தப் பாத்திரம்அதற்குத் தாயானது! தாதுவைத் தாங்கிய பாத்திரத்திற்குதுரோணம் என்று பெயர்; ஆதலால்... அந்த துரோணத்தில் தோன்றியதுரோணன் என்று பெயர்! பரத்துவாசர்பிதாவானார்; குடத்தில் பிறந்து-தவ மடத்தில் வளர்ந்த-தன் குலக் கொழுந்திற்கு...