பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 161 எடுபடாது என்று-அவன் எதிர்க்கவில்லை! (I-பக்.289-70) 32. புரந்தரன். இவனது அறிமுகமும் இன்றியமை யாதது. அரக்கு மாளிகையை அழிக்கும் திட்டத்தில் பெரும்பங்கு கொண்டவன். இவன் பற்றிய அறிமுகம் இது. புரோசனன்-கட் புலனில்லாப் புரவலனின் அமைச்சரவையில்-ஒர் அமைச்சன்; பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சா நீசன்! துரியோதனன் தூக்கிப் போடும்... ஆட்டெலும்புக்கு-வால் ஆட்டும் நாய்; துரியன் உரைக்கும் வண்ணம் குரைக்கும் வாய்! துரியோதனன்-ஒரு திட்டத்தை-அந்த நீசனிடம் கூறினான்; நிறைவேற்றக் கோளினான்! 'புரோசனனே! எனைப் போன்றவனே! என் மற்றொரு மெய்யே! மூன்றாம் கையே! பாண்டவர் போய்ச் சேருமுன்... நீ வாரணாவதற்கு “ 13 வாரணாவதம் என்பது இப்போது வாரணாசி வடகாசி என்று வழங்கப் பெறும் தலம். 1968 - அக்டோபர் - நவம்பரில் நான் துணைவியுடன் 26 நாட்கள் இங்குத் தங்கி நாடோறும் விசுவநாதரைச் சேவித்தேன் கங்கையில் அதிகாலையில் நீராடிய பிறகு.