பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 185 42. ஜராசந்தன் தருமனுக்கு கண்ணன் இவனை அறிமுகம் செய்வதாக அமைந்துள்ளது பாண்டவர் பூமியில். ஒரு மன்னவனுக்கே-தன் இருமகள்களையும்காசி நகர்க் காவலன்கல்யாணம் செய்து கொடுத்தான்; காசிராஜன் பெண்களைகல்யாணம் செய்து கொண்டவன். மகத நாட்டு மன்னன்; -அந்தப் * பேரரசன் திருநாமம்'பிரகத்ரதன்' -அவன் அப்பாவாக வில்லை; அகமுடையாள் இருவரும் அரும்பாத கொல்லை! பிருகத்ரதன்-தேசத்தை பிரஷ்டம் செய்துவிட்டுபெண்டாட்டிகளோடுபெருவனம் போனான்; "சீச்சி! சிரங்காகி சீழ்க்கை பிடிப்பதுவாழ்க்கை!" என்றுவேதாந்தியானான்! அரணியத்தில்அவனொருமுனிவரைக் காண நேர்ந்தது;