பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 243 கவலைக் கடல் வீழ்ந்தார்குறைமுகம் கண்டால்... குறைதீர்த்துக் கரைசேர்க்கும்துறைமுகம்! தரைமுகம்பார்த்து நடந்த-வள்ளிப் பாவையை மணந்ததுரைமுகம்! அன்பில் அமிழ்முகம் பார்த்தால்அருள்முகம் காட்டும்தமிழ்முகம்! Lig மறைமுகம் தனக்குள்மறைமுகமாய் வைத்திருக்கும்இறைமுகம் பனிசடையில்பிறைமுகம் காட்டுகின்றபெம்மான் பெற்றெடுத்த நிறைமுகம்! (I-51-52) இப்பகுதியில் ஆறுமுகம், துறைமுகம், துரைமுகம், தமிழ் முகம், இறைமுகம், நிறைமுகம் ஆகிய உருவகங்கள் யாவும் முருகனை காட்டுபவை என்பது வெளிப்படை 'முகம் என்ற சொல் அனைத்திலும் முகம் காட்டுவது ஒரு நயம். அனைத்திற்கும் ஒரு வைணவரின் உருக்கமான முருக பக்தியைக் காட்டுவது அற்புதம். அவர்தம் சமரச சமய நோக்கு என்றும் வாழ்க சகுனியைப் பற்றிக் கூறும் வாலியார்: