பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (4) தடுக்கில் படுத்திடுக்கும் தரும புத்திரனை. உத்திருட்டமான நரனை; ஒருத்தி- * உதரத்தில் உதித்தசூரியனை உயர்ஆர்யனை. அறவான்களின்ஆதர்ச புருஷனை, நாளைஅத்தினபுரியைஆளவல்ல அரசனை... குதலைச் சொற்களாடும்கற்கண்டை; உயிர் மூச்சிழுக்கும்பூச்செண்டை. ஈரைந்து மாதங்கள் இன்னமும் நிறையாதகீரைத் தண்டை மானிட சாதியின் மேன்மையைச் சாற்றவந்த-சம நீதியின் நிகண்டை... (1-பக். 122) ஈண்டும் அடுக்கடுக்காக அமைந்துள்ள உருவகங்கள் தருமனைப் பல்வேறு ஒளிகளில் காட்டி நம்மை மகிழ் விக்கின்றன. (5 பிறிதோர் இடத்தில் துருபதன் வாக்காக பீமன் காட்டப் பெறுகின்றான். அவனொடுமற்போர் புரிபவர்மண்டியிட்டு-அவன்முன் நிற்போர் ஆவர்!