பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மான் மாமிசம்மொத்தத்தையும் தான் மட்டுமேதின்ன நினைத்தது.... கூனல் மனம் படைத்த சிறு குள்ள நரி! "இதர நால்வரைஎப்படி ஏய்ப்பது? என்று எழுந்தது. குள்ளநரி முகத்தில்-ஒரு கேள்விக் குறி! (1-பக். 263) சற்றுத் தொலைவில் சலசலவென்று ஒடிக் கொண்டிருந்த நதி நரியின் உள்ளத்தில் சதி உருவாகக் காரணமாகிறது. நண்பர்கள் தந்திரமாக ஒவ்வொருவராக விலக்கப் பெறுகின்றனர். நரியின் தந்திரம்; உண்பதற்கு உட்கார்ந்தநண்பர்கள் மேல்-நரி நேசப் பார்வை வீசியது; பின்நைச்சியமாகப் பேசியது! “நண்பர்களே! நீராடாமல்அருந்தக் கூடாதுஆகரம் இதுஅருந்தவத்தோர் கூறிய ஆசாரம்! 'கூழைக்குடித்தாலும்குளித்துக் குடி!' என்றுமுத்தோர் உரைத்திட்ட- -