பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இஃது இமய மலையை வருணிப்பது. இதிலும் வரை என்று இறும் சொற்களின் ஒலிநயம் வரையறையின்றி வருணனையை வளப்படுத்துவதைக் காணலாம். (4) ஆயர்கள் ஆராதனைக்குரிய கிரி: இதன் வருணனை வாலியார் வாக்கில் அமைகின்றது. தண்ணிக் குழந்தைகளை-தம் பன்னீர்க் குடங்களில்தாங்கி வரும்..... நிறைமாத கர்ப்பிணிகளின்நிழல் மேகங்கள் நீள்விகம் பெனும் நெடுஞ்சாலையில் நடக்கையில்... அசதி மேலிட்டுஆடுசதை தடுத்தால்-அவை அககடா எனறுஆசுவாசப் படுத்திக் கொள்ள.... அந்த மார்க்கத்தில்-ஒரு முசாபரி பங்களா உண்டு; ரம்மியம் மிகுந்தரைவத பர்வதம் என்று! மந்த மாருதம்மெல்ல மேய்ந்திடும்-அந்த மலையின் முடியில்-அனிச்சி மலர்கள் மடியில்.... வேலை முடிந்துவிடு திரும்பும்மாலை வெயிலும்-சற்று மல்லாந்து துயிலும்!