பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிகள் விளக்கினர்; அவன்ம்யக்கத்தை விலக்கினர்! 'யாத்திரிகனே! யாரும் இச்சுனைகளில்... விழுந்து நீராடவிரும்புவதில்லை; விரும்புவோர்-உயிருடன் திரும்புவதில்லை! ஐந்து தீர்த்தங்களிலும்ஐந்து முதலைகள் உண்டு; அவைநீண்ட காலமாய் வாழ்கின்றனநீராடுவோரை உண்டு! அவர்கள்அச்சுறுத்தியும் கேளது. நீரில் இறங்கநெடிய முதலையொன்றுபார்த்தனின்பதங்களைப் பற்றியது. பற்றியதும்-அது பெற்ற சாபம் முற்றியது! ஆம்! அர்ச்சுனன் ஆவேசத்தோடுஅதைத் தூக்க... துள்ளிய முதலை-ஒரு தோகையாய் மாறியது; அதுதன் வரலாற்றைதனஞ்சயனிடம் கூறியது! ‘வீரனே! என் பெயர்வர்க்கை! நான்வாழ்வது-தேவலோக வாழ்க்கை: