பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 375 வீமன் சினம் குழியிட்டுக் கொண்டிருப்பதை நாம் மனத்தால் காண்கின்றோம். (iii) பலராமன்: காசிபர் ஒமம் வளர்த்து விசயனும் வசுதேவன் மகளும் கைத்தலம்பற்றிக் கண்ணனிடம் ஆசிபெற்று இந்திரப்பிரஸ்தம் ஏகின செய்தியைப் பலராமன் அறிந்து இதயம் இடிந்து கண்ணனைக் கடிந்து பேசுகின்றான். இவனது சினம் வெடிக்கப் பேசும் உரையை வாலியார் சித்திரிப்பது: ‘சாதுவாய் வந்து-விஜயன் சுபத்திரையைக் கொண்டு செல்லஏதுவாய் இருந்தது நீயா? தழலுதும் வேதியனாய்வேடம் தாங்கத் தோழனுக்குரைத்ததுகுழலுதும் வாயா? முன்பே மணம் முடித்தவன் 'அன்பே! என்று அழைப்பதா என் தங்கையை? அவளும்அவனை விரும்பிஅவனோடு ஒடஅக்கணமே விடுவதா சங்கையை! என் சகோதரி சுபத்திரைசூடு சுரணையற்ற மடந்தையா? சகோதரனே-அத்தகு சகோதரிக்கு உடந்தையா?