பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அழகிய மயில்களின்அகவல்களும்; ஈரும் பேனும்எடுத்துவிட்டு-பின் சேரும்செங்குரங்குகளும், பத்தடிக்குப்பதது தத்தில் தாவும் தங்க மான்களும்; இன்னும்எவ்வளவோ! எவ்வளவோ! அடடா! அனைத்தும்அந்த ஆரண்யத்தின்அழகுககு 하 அழகு செய்தது; அந்த அழகுமிகு அழகு உதிட்டிரன் மனத்தில் உவகையைப் பெய்தது! (Il- பக். 158-160) இந்த வருணனையைப் படிக்கும் நமக்கு அந்த வனத்தையே நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்து கின்றது. நம்மையும் யுதிஷ்டரனின் குழுவில் ஒருவராக நினைக்கச் செய்துவிடுகின்றது (Empathatic Feeling). (6)அர்ச்சுனன் வந்த இடம்: ஓராண்டுத் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்ட தனஞ்செயன் தமிழகத்தில் வந்த காட்டைப் பற்றிய வருணனை: