பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒன்றானவன்-பல என்றாகி-பல என்றானவன்-பின் ஒன்றாகி சேவடிகளைக் கட்டசகாதேவன் கைக்கு எட்டினான்! குறடும்-தாழங் குடையும் தாங்கி-ஒரு குறளாய் வந்து-மாவலி குடுமியில் வைத்த... பொன்னடியை; பங்கயப்... للا (60.وال(6ولي விடாதுபற்றி-சகாதேவன் வினைக்கடல் தாண்டினான்; (11-பக். 334-35) இப்பகுதியில் கண்ணனைப்பற்றிய சகாதேவனின் கருத்துகளனைத்தும் வாலியாரின் வாக்காக வருவதால் அவை அவர்தம் கிருஷ்ணபக்தியை அற்புதமாகக் காட்டும். பார்த்தனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பேசிய பரந்தாமன் வாக்கில் வருவது: எல்லாம் வல்லோனை; எல்லாவற்றிற்கும் தொல்லோனை, எல்லைகள் இல்லோனை; எல்லா உயிர்க்கும் நல்லோனை; அணுவினும் அணுவாய்ஆனோனை; புத்திக்கு எட்டாது போனோனை, ஆகாயம் அம்புவிஆனோனை,