பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& வருணனை வளம் * 25 2. சூரிய மண்டலம் இயற்கையின் முக்கிய பகுதி இது. பார்த்தனுக்குப் பரந்தாமன் வழங்கிய திவ்விய சக்சுவை நாம் பெற்று இந்த அகிலத்தை அண்ணாந்து நோக்கினால் எவற்றைக் காண்போம்? கதிரவன் ஒரு மீனம்போல் தோன்றுவான். நெடுந்துாரம் வானிற் சென்றால் அவன் ஒரு சிறுமீன் போலாகிவிடுவான். வானவெளியில் காணப்பெறும் அண்டங்களில் கதிரவனும் ஒன்று. அண்டங்களின் அதிசயங்களை மணிவாசகப் பெருமான், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்னெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட வரிந்தன் என்று கூறுவார். தேசீய கவி பாரதி, நக்க பிரானருளால் - இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்கள்-வளத் தொகைபல கோடிபல் கோடிகளாம்! " என்று பகர்வான். சூரியமண்டலத்தில் சூரியன் குடும்பத் தலைவன்; கோள்களும், சிறுகோள்களும், வால்மீன்களும், எரிமீன்களும் அவன் பெற்றெடுத்த குழவிகள். நம் பூமியையும் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ இவற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் துணைக் கோள்கள் இவனுடைய பேரப் பிள்ளைகள். இவர்களுள் வால்மீன்கள் மட்டிலும் இவனுக்கு அடங்காப்பிள்ளைகள்; இவை அவனை ஒர் ஒழுங்கில் சுற்றி வருவதில்லை, சூரியனும், பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் நம் கண்ணுக்குப் புலனாகுபவர்கள். 7 திருவாசகம் - திருவண்டப்பகுதி அடி (1.4) 8 பா. க. தோ. பா. கோமதியின் மகிமை 4