பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கருமவினை! என்றுகணித்தனர்-நாளும் தருமவினை புரியும்தவசிகள்; காசியபர் கூடவந்ததுவராடை கட்டியதுளசிகள்! காசியபர் பேசினார்; - கும்மிருட்டில் குமைந்தகுந்தியின் மேல்விடியல் வார்த்தைகளைவீசினார் இன்னதிதியில்இன்ன பட்சத்தில்இன்ன பொழுதில்... மன்னன் பாண்டுவின் மரணம் என்பதுமுன்னமே அவனதுமுன்வினை மொழிந்தது! மற்றபடி... மான்தந்த சாபம்; மாத்திரியின் சல்லாபம்; இத்தியாதி. இத்தியாதி... அந்த முன்வினை மொழிந்த வாக்கு