பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 487 (1) உதிட்டிரன்: யுகம் கடந்தும் புகழ்முகம் காட்டும் உதிட்டிரன் பிறந்தபோது, நாட்டில்நன்னிமித்தங்கள்நேர்ந்தன; நலம்பயக்கும்நாளும் கோளும்தோளொடு தோள்சேர்ந்தன! (1-பக். 118) (2) துரியோதனன். கெளரவர்களில் மூத்தவன். இவன் பிறந்தபோது, தேசமெங்கும் தோன்றினதுர்நிமித்தங்கள்; ஆங்காங்கு நேர்ந்தனஅநேக அனர்த்தங்கள்! திக்கு திக்காகதிடீர் திடீரன்றுதீப்பிடித்தது; ஒருபூகம்பம் இன்றியேபாளம் பாளமாகபூமி வெடித்தது. ஊழிக்காற்று போலபூழிக் காற்றுஊரெங்கும்வீசியது; அதுவீசும்பளந்தவிருட்சங்களைவேரோடு கல்லிவீசியது! நாய்களும் நரிகளும்வாய்விட்டு