பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 உண்மைகளும் படிப்பினைகளும் * 493 (2) புதிய மண்டபம் புகுமனை விழாவுக்குப் பாண்டவர்களை அழைக்க வருகின்றான் விதுரன். செய்தி கட்கிடையே "கட்டிய மண்டபத்தில் கவறாட்டமும் உண்டு” என்பதையும் குறிப்பிடுகின்றான். இதனைக் கேட்ட தருமன் விதிர் விதிர்த்து தன் வியப்பையும் அச்சத்தையும் உதிர்த்துப் பேசுகின்றான்; சூதின் தீமைகளை விரிக் கின்றான்: நம்புவதற்கில்லை-அவன் நடத்தை விருந்தோடு வைக்க நினைக்கிறான் சூதெனும் விடத்தை! பாய்ச்சிகை உருட்டிப் பந்தயம் வைப்பின்-அவலம் ஆய்ச்சிகை மத்தாய் அகத்தைக் கடையும்; அட்டையாய் ஒட்டிய அன்பு மனமெலாம்-தாயக் கட்டையால் ஒருநூறுகூறுகளாய் உடையும்! குலத்தில் பிறந்தோர்குடியில்... ஏசல்; பூசல், உரசல்; விரிசல்; எனப்படும்ஏதோ ஒருசில... கோது வந்தால்-குடி கால்வாசி கெடும்; வேறு