பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

  • *

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிறப்பில் சிசு, இறப்பில் சவம்; இடைப்பட்ட பெயரெலாம்கடைப்பட்ட அவம்! எவர் எங்கேஎவ்வகையில்எய்தினாலென்ன தோற்றம்? ஆற்றும் பணியினாலன்றோஅமைகின்றதுஅவரவர்தம் ஏற்றம்! முன்னம்... மூங்கிலில் தோன்றினான்முக்கண்ணன், துணைப் பிளந்து தோன்றினான்-காயாம் பூ வண்ணன்; அகத்தியரும் ஆசாரியர் துரோணரும் குழந்தையாய் விளைந்ததுகுடத்தில், தாங்களுமதேவசேனாபதி முருகனும்நயனங்கள் மலர்ந்ததுநாணலில்! பிறப்புக்கும்பெறும் பெரும்சிறப்புக்கும்... உறவோ ஒட்டுதலோஒருதுளியும் இல்லை; பின்புஎதற்காகக் கர்ணன்-தான் இன்னான் எனச் சொல்லிஏந்த வேண்டும் வில்லை?