பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் * 523 ஆற்றுதல் நலம், கூடும்ஆன்ம பலம்! (III-Lé. 553-555) (3) வழிபாட்டு வகைகள் 'உன்னை.... உருவமாய்க் கொண்டுஉபாசிப்பதும் உண்டு; அருவமாய்க் கொண்டுஅருச்சிப்பதும் உண்டு! இவ்வழி, அவ்வழி; இவற்றில்எவ்வழிசெவ்வழி? என்று பார்த்தன் வினவ, பரந்தாமன் பகர்ந்தவை: 'அவ்வழியும்இவ்வழியும்எவ்வழியும்செவ்வழியே, எல்லாமே நேர்வழியே, எனைவந்து சேர்வழியே! என்னிடம் தம்மையேஎவரெவர் ஈர்ந்தார்? என்னையே சரனெனஎவரெவர் போந்தார்? எனையலால் சுகமெனும்எவ்ரெவர் சீந்தார்? எனையலால் சுவையெதும் எவரெவர் மாந்தார்? அவரெல்லாம்-என்னை அடைவது திண்ணம்; எனக்கு