பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு முக்கிய மானதுமார்க்கமல்ல; எண்ணம்! அருவமாய்-என்னை ஆராதிப்பது-ஒர் அற்புதக் கிரமம்; ஆனால்அதை அனுசரிப்பது சிரமம்! (உருவம் பற்றி) பலவகை ஆய்வுகளும் பண்டிதர்களோடு போகட்டும்; பக்தியோகம்பாமரர்க்கென்று ஆகட்டும்! அவரவர்அவரவர்க்குப்பிடித்த வடிவில்-என்னைப் பிடித்து வைக்கட்டும்; பிடித்த மொழியில்-என்பேர் படித்து வைக்கட்டும்; விக்கிரகம் வைத்து வழிபடவழிபட-இந்திரிய நிக்கிரகம் வாய்க்கும்நாட்பட நாட்பட ! படிப்படியாய் ஏறிப் பதினெட்டாம் படிக்குப் போய்ச் சேருவதுதான்பக்தி யோகம்; கால்வாசி அரைவாசி யின்றிகடுந்தியானத்தில்-என்னுள்