பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவற்றை அடக்க-எந்து அறிவென்னும் வாள்; ஓம் சாந்தி! ஓம் சாந்தி! என்றுஉச்சரித்துப் பழகு; சாந்தம்தான்-தெய்வ சித்தத்திற்கு அழகு! இவற்றை-நீ இயற்றினால்... பிரம்மநிலைக்கான பக்குவம் பெற்றவன் ஆவாய், பிறப்பற்றுப் போவாய்! இவ்வாறு இனிய பிரம்மநிலை யெய்திபித்தம் தெளிந்தவனுக்கு.... துயரம் இல்லை; அவன்தொடஉயரம் இல்லை! உயிர்கள் யாவும்-அவனுக்கு ஒன்று. அவனுக்குஅவன் வேறு; பிற வேறுஅன்று! மெய்ஞ்ஞானம்மிகுந்து விடுவான்; போகப் போக-என்னுள் புகுந்துவிடுவான்! (III-565-67) இறுதியாக இறைவன் பார்த்தனை நோக்கிச் சொல்வது: