பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பீமன் முதுகில் பிள்ளைகளெல்லாம் கங்காருபோல குதிரை தாண்டும்; பீமன் தாண்டினால் பிள்ளைகளை மீட்க ஆறேழு அடிகள் அகழ வேண்டும்! பெரிதும் இவையெல்லாம் பிள்ளமையால் பீமன் புரிந்த பிழைகள்; தன் நெஞ்சத்தறியில்-துரியோதனன் நெடும்பகை ஆடையை நெய்ய உதவிய இழைகள்! (1-பக்:163-4) இவற்றைப் படிக்கும்போது நம்மைப் பிள்ளைப் பருவத்திற்கு இழுத்துச் சென்று நிகழ்ச்சிகளைக் குமிழியிடச் செய்கின்றன! (4) கடவுளர்கள் வாலியார் படைத்த பாண்டவர் பூமி'யில் கடவுளர்களும் காட்சி தருகின்றனர். அவர்கள் பற்றியே வருணனையும் அதி அற்புதமாக அமைந்துள்ளது. () முருகன்: திருமண நிகழ்ச்சியில் வீடுமன் செயலால் ஏமாற்றமடைந்து, மனம் முறிந்த நிலையில் சொர்ணமலைச் சாரலில் ஆங்குள்ள பாகூத நதிக்கரையில் பன்னிரண்டு ஆண்டுகள் நிட்டையில் இருந்தாள்.அம்பை. முருகன் காட்சி தருகின்றான், எப்படி? அம்பையின் முன் அழகொளிரத் தோன்றியது. ஏததுவா எவர்க்கும்