பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சல்லிசாக நினைத்து-யாரை சாப்பிட வந்தாளோஅவனழகு வள்ளி சாக அவளைவிழுங்கியதைக் கண்டாள்; ஆண்மோகம் என்னும் ஆலம் பாதித்து-அங்கமெலாம் நீள நெடுக-ஏகத்துக்கு நீலம் பாரித்து நின்றாள்! பீமனின்- - வலிவையும் பொலிவையும்வர்ணிக்கலானாள்; தன்வசமற்றுப் போனாள்! அடடா! ஆணுக்கு ஆண்ஆசைப்படும்அழகன் இவன்; இளங்குமரியரை அமளியில்-இடை குழையக் குழையக் குலவும்குழகன் இவன்; உடல்வனப்பெனும் ஏர்கொண்டு6T65T நினைப்பெனும் நிலம் உழும்உழவன் இவன்; என்வாலைப் பருவமெனும்சோலைக்கு வாய்ந்தகிழவன் இவன்! மதன்கணை பாய்ந்து-மையல் மதம் பிடிக்கும்-மாதரார் மனவேழத்தை அடங்கும்மாவுத்தன் இவன்; அனுராகக் குதிரையின்ரெளத்திரம் தணித்து-கல்யாண