பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 77 நீண்ட கை அமைந்தஆண்டகை! எரிக்காது ஈசன் விட்டதால்- - மரிக்கா திருக்கும்-மற்றொரு மன்மதன்! அழகன்; - குழகன் எனப்படும்அந்தவேள் கந்தவேள் நிகர்இந்தவேள்! மீதி மிச்சமின்றி-அச்சோ! ஆதிஅந்தம்-ஒர் அப்பழுக்கற்ற அந்தம்! (II-பக்.182) 7. காமஇச்சை மனிதன் பிறந்தநாள் தொட்டு சுடுகாடோ இடுகாடோ ஏகும்வரையில் அவனை ஆட்டிவைப்பது காமம். பல பொருளுடைய இச்சொல் மனிதனின் பல்வேறு இச்சைகளைப் பாங்குற எடுத்தோதினும் அவன் மங்கையர் மீது கொள்ளும் காமமே வலியது; பல்வேறு திசைகளில் அவன் குடுமியைப் பிடித்து ஆட்டுவது. இந்த உணர்வை புலப்படுத்தும் முறைகளில் ஆண்களிடமும் பெண் களிடமும் வேறுபாடுகள் காணப்படும். ஆண்கள் புலப் படுத்தும் முறையில் வேகமும் விறுவிறுப்பும் அதிகமாக இருக்கும். ஒரு சில பெண்களிடமும் இம்முறை காணப் படுவதுண்டு. பாண்டவர் பூமியில் காணப்படும் முறைகளை ஈண்டு நோக்குவோம்.