பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் விபதிகள்

அந்தந்தக் கட்சியில் வந்திங்கு பரவிடும் ஆயிரம் தொற்று நோய்கள்; அரசியல் வாதிசிலர் அரசியலில் வியாதிகள் ஆனதால் வந்த வினைகள்!

சொந்தத்தில் ஒரு கட்சி தொடங்குவார்; பின்னதனை சோற்றுக்கு விற்று விடுவார்; சுகமான பதவிகளும் வெகுமானம் பரிசுகளும் சுயமானம் இழந்து பெறுவார்!

எந்தெந்தக் கட்சியில் எத்தனைநாட் களிவர் இருந்தார்கள் என்ற கணக்கு, எவராலும் அறிதற்கு ஒருநாளும் முடியாது ஏனந்த வம்பு நமக்கு?

சிந்திக்க மறுத்திவர் செல்வாக்கு தேடியே சேரிடம் அறிந்து சேர்வார்;

சீரான முன்னேற்றம் நேராமல் போனதிவர் செய்கையென அறிக மனமே!