பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சற்றும் கூச்சமின்றி

சர்வ கட்சிகட்கும் சுற்றுலா போய்வருவார் சகமெங்கோ, அங்கிருப்பார்!

தண்டல் செய்வதற்குத் தன்னிருகை போதாமல் பன்னிருகை வேலவனைப் பார்த்தேங்கிப் புலம்புகிறார்!

ஆதிசேடன் அடியவரோ 'ஆயிரம் கைகளிலே பாதியைப் பங்குகேட்டுப் படையல்கள் போடுகின்றார்!

தடையின்றி வரும்பொருளைத் தண்டல்செய்ய இவர்களுக்கு உடலெங்கும் கைகள்! உடையெங்கும் பைகள்!

அரசியல் வாதிசிலரின் அலங்கார மாளிகைகள் பரிசிலாய் நாம்கொடுத்த

‘பைசாக் கோபுரங்கள்!"