பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதிரேகைலல்ல... விஞ்ஞா ரேகை!

புது வேகத்தோடு, நீ

புறப்படு -உன் உள்ளங்கை

விதிரேகை என்பதை

விஞ்ஞான ரேகையாக்கு!

அறிவியல் தமிழனாய் நீ

அவதாரம் எடுத்தால்தான்

பொறியியல் உலகம்உன்

புலமையைப் பாராட்டும்!

கலியுகம் அல்ல.இது

கணியுகம்! இணைய

வலைப்படுத்து; ஆற்றல்

வசப்படுத்து, வகுப்பெடுத்து!

விளைந்த நெல்லில்

விதைநெல்லாய் நீ இருப்பாய்;

களைந்த நெல்லில்

கருக்காயாய் இருக்காதே!