இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இறுைல பரதம்
பெற்றவர் தலைகுனியப்
பிள்ளைகள் தலையெடுப்பார்;
கற்றவர் மனம்வருந்தக்
கற்பவர் மனங்களிப்பார்!
கலைபயிலும் வயதினிலே
கண்மூடிப் பழக்கங்கள்;
தலைமுறையைக் கெடுக்கும்
தவறான ஒழுக்கங்கள்!
தந்தையர் நாட்டின்மேல்
தாழ்வான மனப்பான்மை; இந்தியப் பொருளென்றால்
ழிவான மதிப்பீடு!
'இந்தியன் என்பதுவே
ஈனமெனும் ஓர் எண்ணம்;
இந்தத் தலைமுறைக்கு
இனிவேண்டாம் இவ்வெண்ணம்!