பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுைல பரதம்

பெற்றவர் தலைகுனியப்

பிள்ளைகள் தலையெடுப்பார்;

கற்றவர் மனம்வருந்தக்

கற்பவர் மனங்களிப்பார்!

கலைபயிலும் வயதினிலே

கண்மூடிப் பழக்கங்கள்;

தலைமுறையைக் கெடுக்கும்

தவறான ஒழுக்கங்கள்!

தந்தையர் நாட்டின்மேல்

தாழ்வான மனப்பான்மை; இந்தியப் பொருளென்றால்

ழிவான மதிப்பீடு!

'இந்தியன் என்பதுவே

ஈனமெனும் ஓர் எண்ணம்;

இந்தத் தலைமுறைக்கு

இனிவேண்டாம் இவ்வெண்ணம்!