பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற கவிஞர்களுக்கு எளிதில் எட்டாத அந்த அதீதச் சிறப்பு மிக்க மனிதாபிமானமும், தொலை நோக்கும், சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளும்தாராபாரதிக்கான வரங்கள்!

வெவ்வேறு வர்ண உணர்வுக் கலவையாக... உயிர்ப்புள்ள மூலிகை மலர்த்தோட்டமாக இன்னொரு சிகரம் உருவாகியுள்ளது

இதை வெளியிடும் இலக்கியவீதி இனியவன் அவர்களின் அற்புதப்பணி, அளவில்லாத பாராட்டுக் குரியது.

கணிப்பொறியிலிருந்து மீளுமுன்னர், மறுபடி கை விரிக்கிறேன். விரல்களைப் பார்க்கிறேன்.

என் மூலதன விரல்கள். வெளிச்ச விழுதுகளாய்...

இமயத்துக்கும் (3LD6Osteos சிகரங்களாய்... இல்லையில்லை - பத்துச் சூரியன்களாகவே ஒளிர்கின்றன!

அத்தனை செவ்வான வட்டத்து ள்ளும், தாராபாரதி முகங்களே!

நம்மால் போற்றப்படுபவர் முகங்களை அகத்துள் காண்பது சாத்தியமே!

ஆனால், கையிலேயே காண்பது? தாராபாரதி... நீங்கள் என்றும், என்றென்றும் வாழ்வீர்கள் எத்தனையோ, எத்தனையோ பேரை வாழ வைப்பீர்கள்

தாராபாரதியைப் படிப்போர்க்கு, வெற்றி நிச்சயம்!

இன்னொரு சிகரம் - 2002