பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

[...

தம்பூலத்துகள்

பெண்ணை மன்மதத் தின்பண்டம் என்று எண்ணியிருக்கிறார் ஆடவர் - அடியே, கண்ணிரைத் துடைத்துவிட்டு வா -உன் கண்ணிமையை உலர்த்திவிட்டு வா!

கல்யாணம் ஒன்று தானா கழுவாய்? கவலையை விலக்கிக் களிப்பாய் எழுவாய்!

மூன்று முடிச்சு ஏறா விட்டால்

முழுமை யுறாதா பெண்மை? சிந்தி!

பூம்பாவைக் கனவுகள் பூமியில் மெய்ப்பட தாம்பூலத் தரகுகள் தடையானால்,

'கல்யாணக் கப்பம்’ கட்ட மறுப்போம்; 'கல்யாண மறுப்புக் கழகம் தொடங்குவோம்!