பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலைவில் முடங்கில மூலதனும்

மூலையில் முடக்கிய மூலதனம் - வெறும்

மூச்சைச் சுமக்கிற ஏழையினம்!

பச்சிலை மருந்தில் உணவைக் கொடுக்கும் பசிமருந் தில்லை நோய்தீர்க்க! எச்சிலை விழுங்கி விழுங்கியிவர்க்கு

எத்தனை நாட்கள் உயிர்வாழ்க்கை?

கட்சிக் கொடியும் தேர்தலறிக்கையும் கண்ணிர்ச் சாதியை நம்பும்வரை 'அட்சய பாத்திரம் வரும்வருமென்பது ஆரூ டம்தான் வேறில்லை!

தீர்க்கக் கோடும் அட்சக்கோடும் தேசப் படத்தின் அடையாளம்; தீர்க்க முடியா வறுமைக்கோடு தேசத் திற்கொரு அவமானம்!

அஞ்சிக் கிடக்கும் இவர்கள்தேசம் ஆலய மாவது எப்போது? கஞ்சி வரதனும் கந்தய்யாவும் கடவுள் ஆவார் அப்போது: