இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேகப் பருத்தில் மேலாடை
மண்மகள் காதலியின்
மலைமார்பு களுக்கு,
வெண்மேக மேலாடை
விரிக்கின்ற வானமே!
எங்கள் சகோதரிகள்
ஏராள மானவர்கள்,
அங்கம் மறைப்பதற்கு
ஆடையின்றி வாடுகிறார்!
சேலை கூட இல்லை;
சிற்றாடை கேட்கின்றார்;
ஆலைப் பருத்திகளும்
அதைத்தர மறுக்கிறதே!
தேகத்தை மூடுதற்குத்
திறமில்லை; வானம்நீ
மேகப் பருத்தியினால்
மேலாடை நெய்துகொடு!
கார்மேகத் தில்.மீண்டும்
கண்ணன் அவ தாரம்எடு!
நீர்சுரக்கும் உன்னிடத்தில்
நிழலாடை சுரக்கட்டும்!
மேகங்க ளேனும்
மெய்யாய் 'மயில்களுக்கு பேகன் களாகிப்
போர்வை வழங்கட்டும்!
&
&