பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கள் கால்களில் வலுவில்லை என்பத னால்எழ முடியவில்ல; உங்கள் உயரம் தான்நாங்கள் உட்கார்ந் ததனால் தெரியவில்லை!

தேனீக் களுக்குக் காகிதப்பூ தீனி கொடுக்கத் தேவையில்லை: தேனீக் களுக்குத் தோட்டத்தில் தேவைப் படுவது மரக்கிளைதான்!

எந்தப் பங்கும் இனிநீங்கள் இரக்கப் பட்டுத் தரவேண்டாம்! தந்தையர் நாட்டில் எம்பங்கைத் தந்தால் போதும்; தாருங்கள்!

சலுகை யல்ல விரும்புவது; சமமாய் உரிமை எப்பொழுது? உலகம் நமக்குப் பொதுவுடைமை ஒவ்வொரு வர்க்கும் சமவுடைமை!